News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
Similar News
News December 24, 2025
கரூரில் போலீசுக்கு பயந்து கலசத்தை வீசிச் சென்ற திருடர்கள்!

கரூர் மாயனூர் அருகே சங்கரேஸ்வரர் கோவிலில் கடந்த வாரம் திருடப்பட்ட கலசத்தை, மர்ம நபர்கள் நேற்று அருகில் உள்ள வயல் காட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News December 24, 2025
கரூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
அரவக்குறிச்சியில் வசமாக சிக்கிய இருவர்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி பிரிவு அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற அரவக்குறிச்சி போலீசார் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (50) மற்றும் பாண்டியன் (52) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.


