News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
சென்னையில் கேஎஸ்.அழகிரி மனைவி காலமானார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65). இவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.11) காலமானார். வத்சலாவின் இறுதிச் சடங்கு கடலூர் மாவட்டம், திருப்பணிநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
News January 12, 2026
சென்னையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு…

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News January 12, 2026
தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.


