News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 3, 2025
சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சென்னை: தம்பியை வெட்டி சாய்த்த தி.மு.க. நிர்வாகி

தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தினகரன் (27), சரண் (24) சகோதரர்கள். இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இருவரும் மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தினகரன் சொந்த தம்பி என்றும் பாராமல் கத்தியால் சாரணை வெட்டி சாய்த்து போலீசில் சரண் அடைந்துள்ளார். தினகரன், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
News November 3, 2025
சென்னை 3ஆம் இடம் பிடித்து அதிர்ச்சி- SO SAD!

நடப்பாண்டுக்கான மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலேயே சென்னை 3ஆம் இடத்தில் உள்ளது. மேலும், மதுரை முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடின் 2 நகரங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இதுகுறித்து உங்க கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க. மத்தவங்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க.


