News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Similar News

News April 17, 2025

வேலை தேடும் காஞ்சிபுரம் இளைஞர்கள் கவனத்திற்கு

image

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 197 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், <>www.icds.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர், அதே கிராமம்/ஊராட்சி/வார்டு பகுதியில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News April 17, 2025

சிறுசேரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 17) திறந்து வைக்க உள்ளார். சிறுசேரியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,882 கோடி செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சுமார் 1,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

error: Content is protected !!