News April 15, 2025
கோவை விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு!

சிறுமுகை ஆலாங்கொம்பு அருகே, கடந்த 10 ஆம் தேதி, ஆட்டோ மீது, 4 பேர் சென்ற பைக் மோதிய விபத்தில், நகுலன், நிஜு, விதுன் உள்ளிட்ட மூவர் பலியாகினர். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வினித் குமார், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News January 29, 2026
கோவை: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

கோவை மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ-சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <
News January 29, 2026
கோவை: மனைவியின் மண்டையை உடைத்த கணவர்

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 21-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒண்டிப்புதூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் குருமூர்த்தி இல்லை. பின், மது போதையில் வந்த அவரிடம் ஹேமலதா கேள்வி கேட்க அவரை கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
News January 29, 2026
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியா?

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இந்நிலையில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் கோவை தெற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் கோவை வடக்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வானதி சீனிவாசன் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


