News April 15, 2025

ஊத்துமலை அருகே கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

image

ஊத்துமலை அருகே உள்ள மருகாலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28). இவரது மனைவி கவிதா (24) கர்ப்பிணி. சென்னையில் வேலை பார்த்து வந்த கார்த்திக்கு ராஜா தற்போது ஊரில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 28, 2025

தென்காசி: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 28, 2025

தென்காசியில் ரூ.69.49 கோடி ஒதுக்கீடு

image

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்ணீர் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் மூலம் நீர் பிடிப்பதால் தட்டுப்பாடு நிலவுவதாக சாதிர் கூறினார்.

News September 28, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!