News April 15, 2025
ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 29, 2026
‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

‘ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் போர்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மறுஆய்வுக் குழுவுக்கு விண்ணப்பித்து 20 நாள்களில் சென்சார் சான்றிதழ் பெற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால், பிப்., இறுதியில் ஜன நாயகன் ரிலீசாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 29, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 நாள்கள் அவகாசம்

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் <<18976316>>SIR<<>> பணிகளின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு நாளையுடன் (ஜன.30) முடிவடைய உள்ளது. இந்நிலையில், SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில், வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க, மேலும் 10 நாள்கள் கால அவகாசம் வழங்க EC-க்கு SC உத்தரவிட்டுள்ளது.
News January 29, 2026
தவெகவில் சீட்டுக்கு ₹2 கோடி வசூல்?

2026 தேர்தலுக்காக தவெகவில் வேட்பாளர் தேர்வு முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில், சீட் பெற விரும்புவோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. கட்சிப் பெயருக்கு ₹2 கோடி டிடி எடுத்துக் கொடுங்கள்; அப்போதுதான் தேர்தலை எதிர்கொள்ளும் தெம்பு உங்களுக்கு உள்ளதா இல்லையா என்பது தெரியும் என கண்டிஷன் போடுகிறார்களாம். இது விஜய்க்கு தெரியாமல் திரைமறைவில் நடப்பதாக கூறப்படுகிறது.


