News April 15, 2025

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு

image

ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார். தங்கள் விடுதியின் மூலம் அதிகமான புக்கிங் நடைபெற்றதாக ஓயோ மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News August 24, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

image

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.

News August 24, 2025

ஜாம்பவான்களின் வாரிசு… அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்

image

புகைப்படத்தில் உள்ள இருவரையும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்விருவரின் தந்தையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காலம் கடந்த பெருமை சேர்த்த ஜாம்பவான்கள். பேட் வைத்திருப்பர் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் மகன் ரனுக், சுழற்பந்து வீசுபவர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன். உள்ளூர் போட்டியில் இருவரும் விளையாடிய புகைப்படம் இது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது.

News August 24, 2025

Parenting: உங்க குழந்தையின் ஃபோனை கண்காணிக்கணுமா?

image

ஃபோனில் அதிக நேரத்தை செலவிடும் உங்கள் குழந்தை, அதில் என்ன பார்க்கிறது என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் ஃபோனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். Moniterro என்ற App மூலம் இதை நீங்கள் செய்யலாம். இந்த APP உங்கள் குழந்தையின் ஃபோனுக்கு வரும் Calls, SMS-ஐ கண்காணிப்பதோடு, அவர்கள் எவ்வளவு நேரம் ஃபோன் பார்க்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்க உதவுகிறது. SHARE.

error: Content is protected !!