News April 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 307 ▶குறள்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. ▶பொருள்: நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
Similar News
News September 8, 2025
அம்மாடியோவ்.. ₹20 கோடி வாட்ச் அணிந்த பாண்ட்யா!

ஆடம்பரமான பொருள்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது டிரெண்டிங் செய்தியில் இடம்பெறுபவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ஆசியக் கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் அணிந்துள்ள வாட்ச்சின் விலை ₹20 கோடியாம். இந்த வகை Richard Mille RM 27-04 model வாட்ச், உலகிலேயே 50 மட்டுமே உள்ளது. ஆசியக் கோப்பை பரிசுத் தொகையை விட (₹2.6 கோடி) இதன் மதிப்பு சுமார் 10 மடங்கு அதிகம்.
News September 8, 2025
ஸ்டாலினின் கேடுகெட்ட ஆட்சி: அண்ணாமலை சாடல்

<<17644180>>ஏர்போர்ட் மூர்த்தி<<>> கைதுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, கருணாநிதி ஆட்சி காலத்தைவிட கேடுகெட்ட ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருவதாக சாடியுள்ளார். தாக்குதல் நடத்திய விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த மூர்த்தியை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2006 – 11 ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சி மோசமாக இருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
News September 8, 2025
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

<<17648092>>TET தேர்வுக்கு<<>> விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், பிற்பகல் முதலே சர்வர் பிரச்னை இருந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்தனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT