News April 15, 2025

கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டி செல்லும் சமயத்தில் ஓய்வு எடுக்கும் சூழ்நிலை வரும் பட்சத்தில் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம், சுங்கச்சாவடி மற்றும் காவல் நிலையம் அருகில் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

கடலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

கடலூர்: துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்

image

சிதம்பரம் அடுத்த கவரப்பட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (47). துப்புரவு பணியாளரான இவர், நேற்று வீட்டிற்கு நடந்து சென்றபோது அவரது காலில் விஷபூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!