News April 14, 2025

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா? குட் நியூஸ் இதோ..

image

மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.

Similar News

News April 17, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. ₹71,000-ஐ கடந்தது!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,920-க்கும், சவரன் ₹71,360-க்கும் விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது.

News April 17, 2025

வாயை கொடுத்து வசமாக சிக்கிய சீக்கா..!

image

விஜய் சங்கர் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீக்கா. CSK வீரர் விஜய் சங்கர் மெதுவாக விளையாடுகிறார் என விமர்சனக் கணைகள் ஏவப்படும் நிலையில், மற்ற வீரர்களுக்கு Drinks கொண்டு செல்லத்தான் அவர் தேவை என சீக்கா தன் பங்குக்கு சாடியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், உங்கள் கமெண்ட்ரிக்கு அவர் எவ்வளவோ மேல் என கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கா கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 17, 2025

காங்., தலைவர்களின் மர்ம மரணங்கள்.. அரசுக்கு நெருக்கடி!

image

காங்கிரஸ் நிர்வாகிகளின் மர்ம மரணங்கள் அரசுக்கு புது நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். கடந்தாண்டு மே 4-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கருகிய நிலையில், சடலமாகக் கிடந்தார். இந்நிலையில், நேற்று நீலகிரி காங்., தலைவர் <<16113595>>ராஜ்குமார்<<>> மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!