News April 14, 2025

சாயல்குடியில் சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் பலி 

image

சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு சொர்ணநாதன். இவரின் 13 வயது மகள் & அவரது உறவினரின் மகன்(14) இருவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.13) கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகாவை சேர்ந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் பலியாயினர். சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி

image

இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வு கூட்டம் இன்று (நவ.11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

News November 11, 2025

தாய்லாந்தில் பட்டம் வென்ற இராமநாதபுரம் பெண்

image

முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரபு அல்லிராணி ஆகியோரின் மகள் ஜோதிமலர்(28). பி.டெக் பட்டதாரியான இவர் கடந்த நவம்பர் 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்திய சார்பில் போட்டியிட்ட ஜோதிமலர் கலாச்சார தூதர் பட்டம் வென்றார். ஜோதி மலர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 11, 2025

ராம்நாடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!