News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News January 5, 2026
இன்று கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் டிடிவி

தஞ்சையில் அமமுக செயற்குழு & பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவியை, மீண்டும் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், டிடிவியோ தவெகவுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இன்று நடக்கும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
News January 5, 2026
போன் தொலைந்தால்.. இப்படி ஈசியா கண்டுபிடிக்கலாம்

ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings-ல் Google-ஐ கிளிக் செய்யுங்க *‘All Services’ அல்லது ‘Look for Find My Device’ என்ற ஆப்ஷன் தேர்வு செய்யவும் *‘Use Find My Device’ ஆப்ஷனை ‘Switch on’ ஆகி இருப்பதை உறுதி செய்யுங்க *மற்றொரு போனின் பிரவுசரில் google.com/android/find என்ற லிங்கில் தொலைந்த போனில் லாக்-இன் செய்யப்பட்டுள்ள கூகுள் அக்கவுண்ட்டை கொடுத்தால் எளிதாக லொகேஷனை தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
News January 5, 2026
BREAKING: பொங்கல் பணம் ₹3000 இவர்களுக்கு கிடையாது

பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் ₹3000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், யார் யாருக்கு ரொக்கப்பணம் கிடைக்காது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்க்கரை அட்டைதாரர்கள் ( White Card) மற்றும் NO Commodity Card (NC Card) அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் கிடைக்காது. மற்ற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணம் வழங்கப்படும்.


