News April 14, 2025
நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News October 18, 2025
நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்
News October 18, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் இன்று!

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடந்த 1991-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் தேதி நாகை பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட கடற்கரைகள், எழில்மிகு வயல்வெளிகள், பழமை வாய்ந்த கோவில்கள், வேற்றுமை காணாத மக்கள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயம் எதுவென்று கமெண்டில் தெரிவிக்கவும்!
News October 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள், புகார்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் 1800-233-4233 அல்லது 81100 05558 என்ற பேரிடர் கால உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.