News April 14, 2025

நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News April 16, 2025

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

நாகையில் ரூ.17000 சம்பளத்தில் வேலை

image

நாகப்பட்டினம் தனியார் நிறுவனத்தில் இலவச நர்சிங் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு உள்ளது. இதில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.14,500 முதல் ரூ.17,000 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. படிப்பை இடைநிறுத்தம் செய்தவர்களும் இதில் பங்கு பெற்று பயன் பெறலாம். இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்

News April 16, 2025

வேதாரண்யத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் முருகமணி மனைவி கல்பனா என்ற பெண் தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னே சென்ற டூவீலர் திடீரென பிரேக் அடித்ததில் அந்த வண்டியின் மீது மோதி டூவீலர் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கல்பனா மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!