News April 14, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 23, 2025

ராயகிரி அருகே 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ராயகிரி அருகே TN 79 E 3274 என்ற எண் கொண்ட Tata Ace வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் மகன் கிருஷ்ணசாமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 23, 2025

தென்காசி: அங்கன்வாடியில் வேலை.. இன்றே கடைசி

image

தென்காசி மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். Share It.

News April 23, 2025

குத்துக்கல்வலசை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

தென்காசியில் இருந்து பண்பொழி போகும் ரோட்டில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட இந்த கல்லை அடையாளமாக வைக்கப்பட்ட பிறகு இங்குள்ள கிராமத்திற்கு குத்துக்கல்வலசை கிராமம் என்ற பெயர் வந்தது. இப்பகுதியில், வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல் வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தமாகும். உங்க கருத்தை பதிவிட்டு Share பண்ணுங்க.

error: Content is protected !!