News April 14, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

image

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News April 27, 2025

சிவகங்கையில் திமுக மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை

image

சிவகங்கையில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக உள்ள பிரவீன் குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். பிரவீன்குமார் சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது மர்ம கும்பல் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவரது உடல் சிவகங்கை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 27, 2025

சிவகங்கை ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு

image

சிவகங்கை இரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை எளிமையாக பெற தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் ATVM (Automatic Ticket Vending Machine) அமைக்கும் பணி மற்றும் இந்த இயந்திரத்தை இயக்குபவர்கள் இரண்டு (Facilitators) ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் என தெற்கு இரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் மதுரை கோட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 26, 2025

நகரத்தார் குலதெய்வ வழிபாடு வரலாறு

image

காரைக்குடி, சிவகங்கை, கீழச்செவல்பட்டி சுற்றியுள்ள நகரத்தார் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாரம்பரிய முறைப்படி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். அதற்காக 54 மாட்டு வண்டிகளில் நான்கு நாட்களுக்கு முன்பே ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்று வழிபட்டு திரும்பவும் மாட்டு வண்டியிலேயே தங்களது ஊர்களுக்கு வந்து சேர்வது வழக்கம்.

error: Content is protected !!