News April 14, 2025

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது?

image

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 2-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. அரசு தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத போதிலும் ஜூன் 4 அல்லது 5-ம் தேதி திறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 9, 2025

புளியங்குடி புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பு

image

புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News September 9, 2025

தொடர் ஏறுமுகத்தில் சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் உயர்ந்து 81,051 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 24,847 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. TCS, Bajaj Finserv, Tech Mahindra நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும், Tata Motors, Shriram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சற்று நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. நீங்க வாங்கிய SHARE லாபம் தந்ததா?

News September 9, 2025

துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

image

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.

error: Content is protected !!