News April 14, 2025
திருப்பூர்: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். மாரியம்மன் கோயில் தாராபுரம். தில்லாபுரியம்மன் கோயில் – தாராபுரம். சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
BREAKING திருப்பூர் அருகே காவல் அதிகாரி வெட்டிப்படுகொலை!

திருப்பூர் அலங்கியம் தளவாய்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்தபோது, தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக 100 எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதை விசாரிக்க சென்ற சண்முகசுந்தரம், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 6, 2025
திருப்பூர் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

திருப்பூர் மக்களே, விழாக்காலங்களில் ஆன்லைனில் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் மூலம், ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன. அதனை சரியாக ஆராயாமல், பொருட்கள் வாங்க நீங்கள் பணம் செலுத்தும்போது, மோசடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட இணையதளமா என உறுதி செய்த பின் பொருட்களை வாங்க வேண்டும் என திருப்பூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News August 6, 2025
திருப்பூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அலுவலர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதுபடி, அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.