News April 14, 2025
மருமகனை மீண்டும் கட்சியில் சேர்த்த மாயாவதி!

மருமகன் ஆகாஷ் ஆனந்த் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டதால் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார் மாயாவதி. அதே நேரம் ஆரோக்கியமாக இருக்கும் வரை யாரையும் அரசியல் வாரிசாக நியமிக்கப் போவதில்லை என மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அரசியல் வாரிசாக இருந்த ஆகாஷை, கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியிருந்தார்.
Similar News
News January 30, 2026
அரசு திரைப்பட விருதுகள்… கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்

2016 – 2022 ஆண்டுகளுக்கான ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என்ற கேள்வியை SM-ல் மக்களிடம் இயக்குநர் பா. ரஞ்சித் எழுப்பியுள்ளார். திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் விருதுகளில் பாரபட்சம் உள்ளதாக பரவலாக கூறப்படும் நிலையில் உங்கள் கருத்து என்ன?
News January 30, 2026
BREAKING: கூட்டணி முடிவை சொன்னார் விஜய்

தேர்தலை தனியாக எதிர்கொள்ள தயாராகுங்கள் என நிர்வாகிகளிடம் விஜய் வெளிப்படையாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் – TVK கூட்டணியில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்துள்ளதாக தெரிகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்கு சதவீதம், கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என சிலர் ஆலோசனை வழங்கியதாகவும், வேட்பாளர் தேர்வை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 30, 2026
திருப்பதி லட்டு கலப்படம்: ₹250 கோடிக்கு ஊழல்!

திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில், 36 பேர் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2021–24 காலகட்டத்தில், 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகம் செய்து, ₹250 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பால், எண்ணெய்யை பயன்படுத்தாமல் பாமாயில் போன்றவற்றை பயன்படுத்தி போலி நெய் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 9 TTD அதிகாரிகள் & 5 பால் துறை நிபுணர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


