News April 14, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
Similar News
News November 6, 2025
சிவகங்கை: 4 பவுன் நகை பறிப்பு; பைக் திருடர்கள் கைவரிசை

தேவகோட்டை அருகே புளியாலைச் சேர்ந்த அருள் மனைவி தனலெட்சுமி (42). அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊருணி கரையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில், தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
சிவகங்கை: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
News November 6, 2025
திருப்புவனத்தில் மின்னல் தாக்கி பெண்கள் படுகாயம்.!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழராங்கியம் காலனியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி (60). இவரது மருமகள் அன்பரசி (31). இருவரும் தங்களது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் அமிர்தவள்ளி, அன்பரசி ஆகிய இரு வரும் பலத்தகாயமடைந்தனர். இருவரும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


