News April 14, 2025

மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

image

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.

Similar News

News August 25, 2025

ராம்நாடு: வீட்டு வரி பெயர் மாத்தணுமா?

image

ராம்நாடு: நீங்கள் வாங்கிய வீட்டின் பத்திரப்பதிவு வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சல் வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் சரிப்பார்த்த பின் வீட்டுவரி பெயர் 15- 30 நாட்களில் மாறிவிடும். SHARE IT

News August 25, 2025

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <>இங்கு கிளிக்<<>> செய்து முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள் (அ) 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!