News April 14, 2025

டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மயிலம் முருகன் கோவில் திருவிழாவுக்கு தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.

Similar News

News September 22, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை & தனியார் நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களை வட்டார வேளாண் மையத்தில் சமர்பித்து, தேக்கு, செம்மரம், வேங்கை, மகோகனி போன்ற மரக்கன்றுகளை இலவசமாக பெற்று தங்களது விளைநிலங்களில் நடவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 22) வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் பா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

News September 22, 2025

காவல்துறை எச்சரிக்கை: போலி ஆன்லைன் முதலீடுகளில் கவனம்

image

‘முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம்’ என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகளை நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் டுடே குற்றப் புலனாய்வுப் பத்திரிகையில் இன்று (செப். 22) வெளியிட்ட அறிவிப்பில், மோசடிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும், எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!