News April 14, 2025
தமிழ்ப்புத்தாண்டு: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

தமிழ்ப்புத்தாண்டு நாளான இன்று ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம் ஆகிய ராசிகளுக்கு ஜாக்பாட் தான். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த உதவும். மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் புதிய உறவுகளின் தோற்றம் முக்கிய பங்கு வகிக்கும். காதல் மற்றும் திருமணம் கைகூடும். பண வரவு இருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கும் வகையில் இந்தப் புத்தாண்டு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
ஓய்வு பெறும் வரை ‘O’ மட்டும் தான்: EPS தாக்கு

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ‘ஓ’ (2.0, 3.0) போட்டவர் முன்னாள் டிஜிபி என EPS விமர்சித்துள்ளார். திருப்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் எப்படி போனாலும், தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என்றும் சாடினார்.
News September 13, 2025
தவெக கூட்டணி? காங்கிரஸ் தலைமை விளக்கம்

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ், 2006-ம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். மேலும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இது, 2026-ல் கூட்டணி மாற்றத்திற்கு காங்., தயாராவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?
News September 13, 2025
சற்றுமுன்: முன்னாள் முதல்வர் காலமானார்

மேகாலாயா Ex CM டோன்வா டெத்வெல்சன் லாபங்(91) உடல் நலக்குறைவால் ஷில்லாங்கில் உள்ள பெத்தானி ஹாஸ்பிடலில் காலமானார். ஏழை குடும்பத்தில் பிறந்து சாலை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், 1992 – 2008 வரை 4 முறை மேகாலயாவின் முதல்வராக இருந்துள்ளார். 1972-ல் சுயேச்சையாக நோங்போ தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று MLA ஆன பிறகு பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். #RIP