News April 14, 2025
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 18, 2025
வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 17, 2025
குமரியில் ரூ.15 ஆயிரத்தில் வேலை

தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்பு திட்டத்தில் மாவட்ட மருந்தாளுநர் பணிக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு டிகிரி கட்டாயம். சம்பளம் ரூ.15 ஆயிரம். 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், மாவட்ட காசநோய் மையம்,குமரி அரசு மருத்துவ கல்லூரி,ஆசாரிபள்ளம் என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை ஏப்.30க்குள் அனுப்ப வேண்டும்
News April 17, 2025
மார்ச்.24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மார்ச் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.