News April 14, 2025

பிள்ளையார்பட்டியில் இன்று தீர்த்தவாரி!

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News

News July 5, 2025

மயக்கமடைந்த ஏர் இந்தியா பைலட்: பதறிய பயணிகள்!

image

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா- AI2414 விமானத்தின் பைலட் திடீரென மயக்கமடைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. பைலட் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார். பைலட் இல்லாததையடுத்து Co-pilot விமானத்தை இயக்கினார். இந்த பதற்றத்தின் காரணமாக, விமானம் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

News July 5, 2025

பரிதாபமான நிலையில் திமுக: இபிஎஸ்

image

வீடு வீடாக போய் உறுப்பினரை சேர்க்கும் அளவுக்கு திமுக பரிதாபமான நிலைக்கு போய்விட்டது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு கட்சியில் சேர வேண்டுமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவில் சேருங்கள் என வீடு வீடாக போய் கேட்கும் அளவுக்கு திமுக வந்துவிட்டது. இதுவே அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி தான் என்று தெரிவித்தார்.

News July 5, 2025

இந்த வார்த்தையை உங்களால் கூற முடியவில்லையா?

image

‘ஊருக்கு போனா அங்கேயே இருந்திடலாம் போல இருக்கு’ என வெளியூர்களில் இருக்கும் சிலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த வார்த்தைகளைக் கூட கூற முடியாமல் பலர் உள்ளனர். இதற்கு கடன், பண நெருக்கடி, ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் என காரணங்கள் இருக்கலாம். ஆனால், துயரங்கள் உங்களை சூழ்ந்தாலும் மனதில் சிறு புன்னகையை எப்போதும் வைத்திருங்கள். வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழுங்கள்.

error: Content is protected !!