News April 14, 2025

மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் அமல்

image

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ₹8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

Similar News

News July 5, 2025

மதுரை எய்ம்ஸில் ஒரு கட்டடம் ஜனவரியில் செயலாக்கம்

image

2026 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் ஒரு கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற ஜனவரிக்குள் லேப், ஹாஸ்டல் & 150 நோயாளி படுக்கைகள் கட்டமைக்கப்படும் என்றார். 2027-க்​குள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

News July 5, 2025

இன்று நிலநடுக்கம், சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!

image

புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ரியோ தாட்சுகியின் கணிப்பால் ஜப்பான் மக்கள் இன்று பீதியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஜூலை 5-ம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என 2021-ம் ஆண்டிலேயே அவர் கணித்திருந்தார். இதனிடையே, ஜப்பானின் டொகாரா தீவில் கடந்த வாரம் 900 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாட்சுவின் கணிப்பு நடக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பான் அரசு இதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.

News July 5, 2025

ஜூலை 5, 1950… அன்று தொடங்கிய சகாப்தம்!

image

இன்றைக்கு எந்த நொடியிலும் உலகில் என்ன நடக்கிறது என்பதை 24*7 லைவ் செய்திகள் மூலம் தெரிந்துகொள்கிறோம். இதற்கெல்லாம் தொடக்கம் 1950-ல் இதே நாளில் 20 நிமிடங்கள் ஓடிய முதல் செய்தி ப்ரோக்ராமை BBC ஒளிபரப்பியதுதான். இதனை தொடர்ந்துதான் பல செய்தி நிறுவனங்கள் தினசரி செய்தி தொகுப்பை டிவியில் கொண்டு வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு 24 மணி நேரமும் லைவ் செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது.

error: Content is protected !!