News April 14, 2025

PM ஆவாஸ் யோஜனா: 2.72 கோடி புதிய வீடுகள் தயார்

image

PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 2.72 கோடி வீடுகள் கட்டித் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமங்களில் 3.79 கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி கிராமங்களில் புதிதாக 2.72 கோடி புதிய வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 72% முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 10, 2025

அண்ணாமலையின் ஃபிட்னஸ்.. வாழ்த்திய PM மோடி

image

கோவாவில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் 70.3’ டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவை PM மோடி வாழ்த்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டிரையத்லானில் 1.8 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ரன்னிங் செய்ய வேண்டும்.

News November 10, 2025

பிற மதத்தவர்களும் RSS-ல் இணையலாம்: மோகன் பகவத்

image

RSS பதிவு செய்யப்படாததன் காரணத்தை அதன் தலைவர் மோகன் பகவத் விளக்கியுள்ளார். RSS 1925-ல் நிறுவப்பட்டது, எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்பார்ப்பதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை எனவும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தங்கள் அடையாளத்தை விட்டு, பாரத மாதாவின் குழந்தைகளாக வந்தால் RSS-ல் இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

மாணவர்களுக்கு மாதம் ₹10,000 ஊக்கத்தொகை

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை அரசு உயர்த்தியுள்ளது. முழுநேரமாக பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத் தொகை 4,000-ல் இருந்து 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கான தொகை 5,000 ஆக (முன்பு 2,000) அதிகரிக்கப்பட்டுள்ளது. <>https://hrce.tn.gov.in<<>> இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம். SHARE IT.

error: Content is protected !!