News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
குமரியில் கேரளா வியாபாரி பலி

திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (78). இவர் மரத்தினாலான சிறு பொருட்களை குமரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென கன்னியாகுமரிக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக குமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
குமரி: பழைய வாகனம் வாங்கும் போது இது அவசியம் – எஸ்.பி

குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க பயன்படுத்திய வாகனங்களை(Second Hand) வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவணங்களில் பெயர் மாற்றம் அவசியம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பயன்படுத்திய வாகனங்கள் வாங்கும் போது 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் சட்ட மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News January 27, 2026
குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!


