News April 13, 2025

சிவகங்கை: மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!

Similar News

News November 5, 2025

சிவகங்கையில் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

image

சிவகங்கை மக்களே, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ, தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News November 5, 2025

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.5) புதன்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், தே.புதுக்கோட்டை, முனைவென்றி, அண்ணாவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News November 5, 2025

சிவகங்கைக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர் நியமனம்

image

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கடந்த ஆறு மாதமாக காலியாக இருந்ததால், தற்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ள க.பாலதண்டாயுதபாணி என்பவரை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!