News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 4, 2026
அரக்கோணத்தில் போலீசார் அதிரடி!

அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் 4 குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் ரமேஷ் நேற்று (பிப்.3) நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். இதில் மின்னல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் பணிபுரித்த 14 மற்றும் 17 வயது சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

முத்துக்கடையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (பிப்.3) காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
News February 4, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-03) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


