News April 3, 2024
ஓய்வு பெற்றார் தாராள மயமாக்கலின் சிற்பி

ராஜ்யசபா எம்.பி.யாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெற்றார். 1991 – 96ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த இவர், தாராள மயமாக்கல் கொள்கையை அறிமுகம் செய்தார். 2004 – 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை பிரதமராக இருந்த இவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குழந்தை கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.
Similar News
News November 2, 2025
சற்றுமுன்: பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

பிரபல இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது. 1990-ல் ‘நீங்களும் ஹீரோதான்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், பல படங்களை இயக்கியதோடு, ஒருசில படங்களில் நடித்துள்ளார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வி.சேகர், தற்போது ICU-வில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைப்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News November 2, 2025
SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி: உதயநிதி

SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து பேட்டியளித்த DCM உதயநிதி, SIR மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் செய்ததுபோல, தனக்கு எதிரான வாக்குகளை நீக்குவதே பாஜகவின் திட்டம் என விமர்சித்த அவர், தமிழகத்தில் அவர்களின் முயற்சி வெற்றிபெறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 2, 2025
திமுக ஆண்டது போதும்: அன்புமணி

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை அரசு ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அன்புமணி சாடியுள்ளார். தமிழகத்தை திமுக ஆண்டது போதும், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் சூளுரைத்துள்ளார். இன்னும் 6 மாதங்களில் நமது கூட்டணி ஆட்சி வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்த கூட்டணியா இருக்கும்?


