News April 13, 2025
பெரம்பலூர்: சிறுமியை கடித்து குதறிய நாய்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரலி கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி புவனேஸ்வரி(14). விடுமுறை என்பதால் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, புவனேஸ்வரியை கடித்துக் குதறியது. இதில், படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
பெரம்பலூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.02) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வுகாணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


