News April 13, 2025

அதிக காரம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

image

காரம் சுவையை கொடுத்தாலும் அதிகம் எடுத்தால் ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். *அளவுக்கு அதிகமான காரம் நிறைந்த உணவை சாப்பிட்டால் மார்பில் தொடர்ந்து எரிச்சல் ஏற்படும். *மிளகாய் பொடியை உணவில் அதிகம் பயன்படுத்தினால் செரிமான பிரச்னை ஏற்படுவதோடு குமட்டல், வாந்தி ஏற்படலாம். *மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கோடைக்காலம் என்பதால் காரத்தை குறைப்பது நல்லது.

Similar News

News July 4, 2025

க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

image

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP

News July 4, 2025

PF-ல் சேரும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

image

புதிதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் அறிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2 தவணைகளாக அதிகபட்சம் ₹7,500 வீதம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊழியரை சேர்க்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூப்பர் பிளானா இருக்கே…

News July 4, 2025

நாய்க்கடியை அலட்சியம் செய்யாதீங்க: அரசு எச்சரிக்கை!

image

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இருசிறார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!