News April 13, 2025

ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்

image

பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பொது மக்களிடம் குறைந்த விலையில் வாங்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபோன்று ரேஷன் அரிசி, பொருட்கள் கடத்தல் குறித்து, பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Similar News

News April 15, 2025

தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

image

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் ‌தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.

News April 15, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்‌ஷிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 14, 2025

சிவகாசி மேயரின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு

image

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியாகியது. இதில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் மகன் பிர்லா இன்பம் சிவகாசி மாநகர திமுக இளைஞர் அணி 5ஆம் பகுதி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வான பிர்லா இன்பம் நிதி அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!