News April 13, 2025
வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா உறுதி

மே.வங்கத்தில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வக்ஃப் சட்டத்தை அரசு அமல்படுத்தாது என அம்மாநில CM மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டு வந்தது. எனவே, அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 16, 2025
ராசி பலன்கள் (16.04.2025)

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – களிப்பு ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – பகை ➤கன்னி – வரவு ➤துலாம் – ஆர்வம் ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உழைப்பு ➤கும்பம் – யோகம் ➤மீனம் – பணிவு.
News April 16, 2025
கேப்டன்சியில் அசத்தும் ஷ்ரேயஸ்

கடந்த ஐபிஎல் சீசனில் KKR அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், நடப்பு ஆண்டு பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக, இன்றைய த்ரில் போட்டியில் ஷ்ரேயசின் கேப்டன்சி முடிவுகள் பாராட்டுகளை பெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தியது, குறைவான ரன்கள் என்றாலும் வெற்றிகரமாக defend செய்தது என்று அவர் கலக்கியிருக்கிறார்.
News April 16, 2025
மெரினா கடற்கரைக்கு கட்டணமா? ஏன்?

மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார். மேலும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.