News April 13, 2025

முர்ஷிதாபாத்தில் மத்திய படைகள் குவிப்பு!

image

மே.வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்ஃப் வாரிய சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 3 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய படைகளை அனுப்புமாறு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு ஏப்.17 க்கு வழக்கை ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து முர்ஷிதாபாத்தில் 600 BSF வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News September 5, 2025

அழகால் மயக்கும் கேரளத்து பைங்கிளிகள்

image

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள திரையுலக நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன. கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன், மிர்னா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகைகள் பாரம்பரிய ஆடை அணிந்து ஓணம் கொண்டாடியுள்ளனர். அவர்களுடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இனி என்ட ஸ்டேட் கேரளா, என்ட மொழி மலையாளம், என்ட CM பினராயி விஜயன் என கமெண்ட் செய்கின்றனர்.

News September 5, 2025

சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

image

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.

News September 5, 2025

BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

image

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!