News April 13, 2025

திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

image

திருப்பூர், மூலனூர் அருகே உள்ள கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் நேற்று காலை பெரமியத்தில் உள்ள, ஒருவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரங்களில், தேங்காய் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தென்னை மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியில், கொக்கி உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 17, 2025

திருப்பூர்: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

திருப்பூர்: விபத்தில் ஒருவர் பலி!

image

திருப்பூர், பெருமாநல்லூர் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!