News April 13, 2025
வரலாற்றில் இன்று

▶1919இல் ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்தது, இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ▶1954இல் சென்னை மாநில முதலமைச்சராக காமராஜர் பதவி ஏற்ற நாள் ▶1930இல் காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. ▶இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
Similar News
News September 5, 2025
அழகால் மயக்கும் கேரளத்து பைங்கிளிகள்

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள திரையுலக நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன. கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன், மிர்னா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகைகள் பாரம்பரிய ஆடை அணிந்து ஓணம் கொண்டாடியுள்ளனர். அவர்களுடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இனி என்ட ஸ்டேட் கேரளா, என்ட மொழி மலையாளம், என்ட CM பினராயி விஜயன் என கமெண்ட் செய்கின்றனர்.
News September 5, 2025
சட்டம் அறிவோம்: இந்த சட்டம் ஆண்களுக்கு தெரியணும்!

சில மனைவிகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கணவனை மிரட்டி குடும்பத்தின் அமைதியையும், நிம்மதியையும் சிதைக்கும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், BNS பிரிவு 351 உதவும். ஒருவரை அச்சுறுத்தி அவரை சேதப்படுத்தும் நோக்கத்துடன், மிரட்டும் செயலைக் குற்றமாகக் கருதும் தண்டனை சட்டம் இது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரையும் சிறை & அபராதம் விதிக்கப்படும். SHARE IT.
News September 5, 2025
BCCI பொறுப்புக்கு காய் நகர்த்தும் பிரவீன் குமார்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். BCCI-ன் தேசிய அணிக்கான தேர்வுக்குழுவில், 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்பதால், பிரவீன் குமார் தற்போது விண்ணப்பித்துள்ளார். அதேபோல், மற்றொரு முன்னாள் வீரரான RP சிங்கும் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.