News April 3, 2024

ராபர்ட் பயஸ் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை

image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி இலங்கைக்கு திரும்பிச் சென்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொழும்பு சென்ற அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், 32 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்றது எப்படி என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 2, 2025

6, 6, 6, 4, 4, 4, 4… மிரட்டல் அடி

image

வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களமிறங்கிய இந்திய அணியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடியால் கரை சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தர், 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களை விளாசினார். இதில், அவர் ஒரே ஓவரில் 4,6,6 விளாசி, ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். சுந்தரின் மிரட்டலான ஆட்டத்தை யாரெல்லாம் லைவ்வாக பார்த்தீங்க?

News November 2, 2025

ஃபேஷனில் கலக்கும் பைசன் ரஜிஷா விஜயன்

image

கர்ணன், ஜெய் பீம், சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன், தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அழகு மற்றும் திறமை இணைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய போட்டோக்கள் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 2, 2025

கரூர் துயரம்.. விஜய் சிக்குகிறாரா?

image

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிப்புரத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜய்யும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!