News April 12, 2025

மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

image

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 3, 2025

ராமாயண வில்லன்கள் தற்போதும் உள்ளனர்: UP CM

image

ராமாயணம், மகாபாரதத்தின் வில்லன்கள் இன்றும் புதிய வடிவில் உள்ளதாக உ.பி., CM ஆதித்யநாத் கூறியுள்ளார். இன்றும் சூர்ப்பனகை, தடாகா போன்றோரை சமூகம் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், அவர்களிடமிருந்து சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். சாதி, தீண்டாமை என்ற பெயரில் சமூகத்தை பிரிப்பவர்கள் முந்தைய பிறவியில் சூர்ப்பனகையின் கூட்டாளிகளாக இருந்திருப்பர் என்றும் கூறினார்.

News October 3, 2025

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை: மஸ்க் ரியாக்‌ஷன்

image

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை’ என்ற X பதிவிற்கு, சிந்திப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு ரீட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க். தற்போது இது வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியர்கள் இங்கிலாந்தில் கால் பதித்து ஆங்கிலேயர்களாக மாறினால், பின்னர் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களாக மாறினர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆளவில்லை’ என உள்ளது. இந்த பதிவில், காலனித்துவமே இல்லை என கூறப்படுகிறது.

News October 3, 2025

மணிகண்டனுக்காக மெனக்கெட்ட ரிஷப் ஷெட்டி

image

‘காந்தாரா சாப்டர் 1’ பட தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் ரிஷப் ஷெட்டிக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், இயற்கையாகவே டப்பிங்கிற்கான ஆசிர்வாதம் அவருக்கு உள்ளதாக ரிஷப் கூறியுள்ளார். ஆனால், கர்நாடக டப்பிங் யூனியனில் மணிகண்டன் பதிவு உறுப்பினர் இல்லை என்பதால், குறிப்பிட்ட தொகை கொடுத்து சிறப்பு அனுமதி வாங்கி மணியை டப்பிங் செய்ய வைத்ததில் பெருமை என்றும் ரிஷப் நெகிழ்ந்துள்ளார்.

error: Content is protected !!