News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 2, 2026
திண்டுக்கல் வரும் CM ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.7ம் தேதி திண்டுக்கல் வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அரசு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேடை, முதல்வர் வாகனம் வரும் பாதை, பொதுமக்கள் அமரும் இடம், வாகன நிறுத்தும் இடம் ,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.
News January 2, 2026
கொரோனா பாதிப்பு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

பருவகால நோய்களில் ஒன்றாக கொரோனா உருமாறியுள்ளது. TN-ல் செப். மாதம் முதல் தற்போது வரை காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளிட்டவைகளால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சிலருக்கு காய்ச்சல் சரியானாலும், 4 – 8 வாரங்கள் வரை வறட்டு இருமல் நீடிக்கிறது. இது, உருமாறிய கொரோனா ஏற்படுத்திய தாக்கம்தான். தொடர் சிகிச்சைக்குப் பின் படிப்படியாக குணமாகும் என்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என DPH கூறியுள்ளது.
News January 2, 2026
பிராந்திய மொழிகளை கற்க வேண்டும்: மோகன் பகவத்

குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது தாய்மொழியில் பேச வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் அங்குள்ள பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் தான் என குறிப்பிட்ட அவர், அவை அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்றார்.


