News April 12, 2025

மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News October 24, 2025

மயிலாடுதுறை: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு 044–25342441 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 24, 2025

மயிலாடுதுறை மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

image

மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது, மின்கம்பிகள் அருந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், மின்கம்பிக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர்கள் துணையோடு வெட்ட வேண்டும். இழுவை கம்பியிலோ, மின்கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது, மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டக்கூடாது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

News October 24, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 45,500 கனஅடியாக நேற்று மாலை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 60,000 கன அடி வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

error: Content is protected !!