News April 12, 2025
கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதியுதவி

சென்னை, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி துப்புரவுப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இதனை கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
News August 23, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னையில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சோழிங்கநல்லூரில் 98.5 மி.மீ, புரசைவாக்கத்தில் 77.6 மி.மீ, அம்பத்தூரில் 58 மி.மீ, தண்டையார்பேட்டையில் 46 மி.மீ, மாம்பலத்தில் 41.2 மி.மீ மற்றும் பெரம்பூரில் 40.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
News August 23, 2025
சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை, கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (50) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் மின்சார கம்பிகள் மற்றும் உபகரணங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.