News April 12, 2025
அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
சூப்பர் 4 சுற்றில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடும் போட்டிகளின் விவரம் வெளியாகியுள்ளது. குரூப் A-ல் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, வரும் 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன் பிறகு 24-ம் தேதி வங்கதேசத்துடனும், 26-ம் தேதி இலங்கையுடனும் இந்தியா மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
News September 19, 2025
காந்தாரா ரசிகர்களுக்கு 22-ம் தேதி காத்திருக்கும் டிரீட்

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் 2-ம் பாகமான ‘காந்தாரா சாப்டர் -1’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 22-ம் தேதி 12.45 PM வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் நடத்த கதையாக ‘காந்தாரா சாப்டர் -1’ உருவாகியுள்ளது.
News September 19, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

HDFC, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ், பேங்க் ஆக் இந்தியா, கரூர் வைஸ்யா ஆகியவை கடன்களுக்கான MCLR(marginal cost of funds based lending rate) விகிதங்களை 5 முதல் 15 புள்ளிகள் வரை குறைத்துள்ளன. இது இந்த மாதம் முதலே அமலானதால், கடன் வாங்கியவர்களுக்கு அடுத்த EMI தொகை குறையும். வீட்டுக் கடன் போன்ற நீண்ட கால கடன் பெற்றவர்கள் இதனால் பெரியளவில் பயனடைவர். SHARE IT.