News April 3, 2024
மணச்சநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு

மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரகம்பி, எதுமலை கிராமத்தை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக வாகனம் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் சாலை போடப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
திருச்சி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

திருச்சி மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News September 19, 2025
திருச்சியில் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வரும் 21-ம் தேதி மாலை 3.30 முதல் 5.30 மணி வரை, சதுரங்க பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட சதுரங்க சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் பயிற்சி அளிக்கிறார். குழந்தைகள் சதுரங்க போர்டுடன் கலந்து கொள்ளலாம். முன்னதாக காலை 10.30 முதல் 11.30 மணி வரை, சதுரங்க பயிற்சியாளர் சங்கரா நடத்தும் வாராந்திர பயிற்சியும் நடைபெற உள்ளது என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
திருச்சி: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <