News April 12, 2025
ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!
Similar News
News November 8, 2025
கிளாஸி துல்கர் சல்மான்

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு, 3 மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது குரல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கதை தேர்வில் அதீத கவனம் செலுத்தும் துல்கர், நடிப்பிலும் மிரட்டி வருகிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிளாஸி துல்கர் சல்மானை பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 8, 2025
பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News November 8, 2025
போருக்கு ரெடி: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி

இஸ்தான்புல்லில் நடத்த PAK-AFG இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இனி பேச்சுவார்தை நடத்த வாய்ப்பில்லை என பாகிஸ்தான் <<18234772>>அமைச்சர் ஆசிப் <<>> கூறியிருந்தார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் ஆப்கான், போருக்கு தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக PAK-AFG எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


