News April 12, 2025
வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
Similar News
News August 24, 2025
திருவள்ளூர்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

திருவள்ளூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டறங்கில் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, மின் துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் குறைகளை மனுவாக நேரடியாக தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 24, 2025
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாயை சேர்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த வட மாநில வாலிபர்கள் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனர். இந்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் வரும் சத்தத்தை கேட்டு வட மாநில வாலிபர்கள் தப்பி ஓடியுள்ளார்.