News April 12, 2025

குழந்தைகளை போனை தூரம் வைக்க இதைச் செய்யுங்கள்!

image

குழந்தைகளும் தற்போது போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன்களை உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும். பெற்றோர் செய்வதை தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் *வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் *ஏதாவது கலை திறனில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

Similar News

News August 19, 2025

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

image

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

News August 19, 2025

மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

image

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.

News August 19, 2025

INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

image

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!