News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
Similar News
News December 6, 2025
இராம்நாடு: இலவச மருத்துவம் முகாம் நடைபெறும் இடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் முதுகுளத்தூர் திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நாளை (டிச.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.05) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News December 5, 2025
பரமக்குடி மாணவி சாதனை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் 123 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் போட்டிக்கு தேர்வாகி முதல் இடம் பிடித்துள்ளார். இதில் சுபாந்தினி, தேஜா மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.


