News April 12, 2025

அரியலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று சூறைக் காற்றுடன் விடாமல் கனமழை கொட்டித்தீா்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டோடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. மேலும், விளம்பர பதாகைகள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.

Similar News

News April 15, 2025

அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 15, 2025

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக இன்று (ஏப்.15) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூரில் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் மின்நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

அரியலூர்: தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர்

image

அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோயிம் தீரும் என்பது ஐதீகம். வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்

error: Content is protected !!