News April 12, 2025

தேனி:டாக்டரிடம் பழகி திருமணம் செய்து ரூ.9.69 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு

Similar News

News November 28, 2025

தேனி: பார்க்கிங் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

image

தேனி, அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (46). இவரது தோட்டத்திற்கு அருகில் பாண்டி (38) என்பவர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ஆட்டோவை தள்ளி நிறுத்துமாறு பாண்டியிடம் இளையராஜா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி இளையராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராக மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரனை

News November 28, 2025

டி.சுப்புலாபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

image

ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ.29) காலை 10 மணி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாமில் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலன், பல், கண், மன நல மருத்துவம், நுரையீரல், சர்க்கரை, நோய்களுக்கு சிகிச்சை ஆலோசனை, ரத்தம், சளி எக்கோ, அலட்ரா சோனோகிராம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.

News November 28, 2025

தேனி: முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

image

தேனி மாவட்டத்தில் 2600 ஹெக்டர் பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு திட்டத்தில் 40 ஹெக்டர் பரப்பு முந்திரி சாகுபடி விரிவாக்கம் செய்ய தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஹெக்டர்க்கு ரூ.18,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!