News April 12, 2025
திண்டுக்கல்லில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஒட்டன்சத்திரத்தில் கொலை வழக்கில் கைதான சூர்யா(26) , சிறுமி பாலியல் வழக்கில் கைதான வினித் குமார்(24), ஆபாச வீடியோ வழக்கில் கைதான செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 4, 2025
திண்டுக்கல்: இலவச Tally பயிற்சி!

திண்டுக்கல்லில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, கம்பியூட்டர் Tally பயிற்சி வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி, தங்குமிடம், சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442628434, 8610660402 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 4, 2025
வெள்ளுமா திண்டுக்கல் டிராகன்ஸ்?

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டி என்.பி.ஆர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன் அணியை எதிர்கொள்ளும்.
News July 4, 2025
திண்டுக்கல்: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல்: மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சதீஷ், கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரணடைந்துள்ளனர்.