News April 11, 2025
ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரத்தில் மட்டும் 2000-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது.
Similar News
News November 5, 2025
கிரிசில்டா மிரட்டி திருமணம் செய்யவைத்தார்: ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டியதால் அவரை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார். கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்ற அவர், ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், DNA சோதனையில் குழந்தை தன்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
News November 5, 2025
வாக்கு திருட்டு: ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு

ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்., கட்சிக்கே வெற்றி என கூறியதாக தெரிவித்த அவர், மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளார். ஹரியானாவில் நடந்திருக்கும் மோசடிகள் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
BIG BREAKING: கூட்டணி முடிவு… அறிவித்தார் விஜய்

விஜய் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை தவெக சந்திக்கும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கூட்டணிக்கு வர வேண்டும் என ADMK, BJP மாறி மாறி அழைப்பு விடுத்த நிலையில், அதனை தவெக நிராகரித்துள்ளது.


